முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம், தள்ளிப்போகும்?

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர்
எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., தயாரான நிலையில், தமிழ்பாடகேள்வித்தாளில, 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாககூறி, மதுரையைச் சேர்ந்த தேர்வர், உயர் நீதிமன்றம்,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்தகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ் பாடதேர்வர்களுக்கு, புதிய தேர்வை நடத்துவதா, அல்லது,மேல் முறையீடு செய்வதா என டி.ஆர்.பி.,தமிழக அரசின் ஆலோசனையை பெற்று, அதனடிப்படையில், முடிவு எடுக்கப்படும் என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட்டபோதும் அரசு தீர்ப்பை எதிர்த்தது மேல்முறையீடு செய்யுமா? அல்லது மறுதேர்வு நடத்துமா ? என்பது ஓரிருநாளில் தெரியவரும் .மேலும் அரசின் முடிவுக்காக காத்திருக்கும் ஏ, சி ,டி பிரிவில் தேர்வு எழுதி மறுதேர்வால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக்கருதும் தேர்வர்கள் சிலர் மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.

டி.ஆர்.பி., எந்தமுடிவை எடுத்தாலும், முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம், தள்ளிப்போகும். ,தற்போதையசூழல் காரணமாக, தமிழ் ஆசிரியர் நியமனம், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog