குரூப்-2 விண்ணப்ப ஒப்புகை வெளியீடு 

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்விற்கான, ஒப்புகை பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் 12.12.2013ம் தேதியன்று, குரூப் 2 பணிக்கான தேர்வை நடத்தவுள்ளது. 1,064 காலியிடங்களுக்கான இந்த தேர்விற்கு, 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 

அவர்களின் விவரங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான, www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தி"ன் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம் என, தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog