முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை 28.11.2013 க்கு ஒத்திவைப்பு முதுகலைப்பட்டதாரிதமிழ்ஆசிரியர்களுக்கானபோட்டித்தேர்வில்,பிவரிசைவினாத்தாளில்40கேள்விகள்எழுத்துப்பிழைகளுடன்இருந்தன.பிழையானகேள்விகளுக்குமுழுமதிப்பெண்வழங்கவேண்டும்எனக்கோரிசென்னைஉயர்நீதிமன்றமதுரைகிளையில்மனுதாக்கல்செய்யப்பட்டது. 

இந்தமனுவைவிசாரித்தநீதிபதிஎஸ்.நாகமுத்து,தமிழ்ப்பாடத்துக்குமறுதேர்வுநடத்தஆசிரியர்தேர்வுவாரியத்துக்குஉத்தரவிட்டார்.இந்தஉத்தரவைஎதிர்த்துதமிழகஅரசின்பள்ளிக்கல்வித்துறைமுதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பிசெயலர்ஆகியோர்மேல்முறையீடுமனுவைத்தாக்கல்செய்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து வழக்கினை ஒத்திவைத்தது அவ் வழக்கு .நாளை ( நவம்பர் 12 ந் தேதி) வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.

அன்றுநீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.இதற்கிடையில்அவ்வழக்கு இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று( 21.11.2013) விசாரணைக்கு வந்தது. 

முதுகலைப்பட்டதாரிதமிழ்ஆசிரியர்களுக்கானபோட்டித்தேர்வில் A C D வகை வினாத்தாள்களக்கொண்டு தேர்வெழுதியவர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகி மறுதேர்வு நடத்துவதால் தேர்வெழுதியவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் தேர்வெழுதிய அனைத்து பிரிவினருக்கும் பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்யலாம் என்ற TRB யின் யோசனக்கு பதிலாக B வினாத்தாளில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்து அதனை 150 மதிப்பெண்களுக்கு மாற்றி தேர்வுமுடிவுகளை வெளியிடலாம் என தங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் இன்று அஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்தவிசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் இந் நிலையில் அடுத்த விசாரணையின்போதுதான் அரசின் நிலைப்பாடும் பிற எதிர்மனுதாரர்களின் நிலைப்பாடும் தெரியவரும்

Comments

  1. Sir very nice.news. Also tell what about pg other sub cases. t.rajeshphy@gmail.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog