முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மேலும் தள்ளிப்போகும்?
முதுகலை தமிழாசிரியர் தேர்வு தடை குறித்த அரசின் மேல் முறையீடு குறித்த வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர்
அடங்கிய அமர்வு இடைக்கால தடைவிதித்து வழக்கினை ஒத்திவைத்தது அவ் வழக்கு .வருகின்ற நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.
வழக்கின் அடுத்த கட்ட நிலையை அறிந்துகொள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்வெழுதிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்,அடுத்தவாரம் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன,.எனவே வழக்கின் விசாரனை மேலும் தள்ளிப்போகக்கூடும் என்றும் அதன் முடிவு தெரிவதற்கு மேலும் தாமதம் ஆகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்து முழுவிவரம் நவம்பர் 12 அன்று தெரியக்கூடும்..
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment