முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மேலும் தள்ளிப்போகும்? முதுகலை தமிழாசிரியர் தேர்வு தடை குறித்த அரசின் மேல் முறையீடு குறித்த வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடைவிதித்து வழக்கினை ஒத்திவைத்தது அவ் வழக்கு .வருகின்ற நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது. வழக்கின் அடுத்த கட்ட நிலையை அறிந்துகொள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்வெழுதிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்,அடுத்தவாரம் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன,.எனவே வழக்கின் விசாரனை மேலும் தள்ளிப்போகக்கூடும் என்றும் அதன் முடிவு தெரிவதற்கு மேலும் தாமதம் ஆகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்து முழுவிவரம் நவம்பர் 12 அன்று தெரியக்கூடும்..

Comments

Popular posts from this blog