குரூப்-1 தேர்வு ஏப்ரல் 26-ந் தேதி நடைபெறுகிறது;தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு 

துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு வரும் 2014 ஏப்ரல் மாதம் 26-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 28-ந் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு கட்டணமாக 125 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இமெயில் முகவரி மற்றும் கைபேசி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog