ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு

 இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல்1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது. மேலும் அரசு தரப்பில்AFFIDAVITதாக்கல் செய்தனர்.அரசு தரப்பு AFFIDAVITக்கு தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா' வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி2க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறபித்தார்.

 இதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog