முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொட்டையடித்து நூதன போராட்டம்
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறையை கண்டித்தும் மற்றும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தனசிங் ஐசக் மோசஸ் வரவேற்புரையாற்றினார்.
பள்ளிக்கல்வித்துறை
பின்னர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மெரினா டவர் அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, மாநிலப்பொறுப்பாளர்கள் 6 பேர் மட்டும் முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியிடம் தங்கள் மனுவை கொடுத்துவிட்டு வந்தனர்.
பின்னர் இதுகுறித்து மாநிலத்தலைவர் கே.மணிவாசகன் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்த பேரணியின் முக்கிய நோக்கம், பள்ளிக்கல்வி துறையை 3½ ஆண்டுகாலமாக அணுகி எந்தவித செயல்பாடுகளும் இல்லாத நிலை இருக்கிறது. இதில் முதல்–அமைச்சர் தலையிட்டு இதை சரிசெய்ய வேண்டும். மேலும், 6–ம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியரை விட, 12–ம் வகுப்பு எடுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஊதியம் குறைவாக வாங்குகிறார் எனவே அவர்களின் ஊதியத்தை சரிசெய்ய வேண்டும்.
மொட்டையடித்த ஆசிரியர்கள்
அரசாணை 720–ல் திருத்தம் செய்ய வேண்டும். மேலும் தேர்வுப்பணிகளின் உழைப்பு ஊதியம் மற்றும் மதிப்பு ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணியை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் கை.இளங்கோவன், மாநிலச்செயலாளர் செ.வின்செண்ட், மாநிலப்பொருளாளர் சி.திருஞானகணேசன் உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்த 1500–க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியில் 400–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மொட்டையடித்து கலந்துகொண்டனர்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment