TRB PG TAMIL RESULT விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும்? 

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசின்தலைமை வழக்குரைஞர் சோமையாஜிஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. 

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார் நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.

வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முதுகலை தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பின் நகல் நேற்று (17.12.13) வரை கிடைக்கவில்லை எனவும் கிடைத்த உடன் டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என தகவலறிந்தவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கட்-ஆப் மதிப்பெண் என்னவாக இருக்கும் என தேர்வெழுதிய அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருகின்றனர்.எவ்வாறு இருப்பினும் 95 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்பெற்றவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க் அளவில் இருக்கும் என நம்பப்படுகின்றது.

Comments

Popular posts from this blog