சென்னை
உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள
மேலும் பல வழக்குகள் (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில்
விசாரணைக்கு வந்தன வழக்குகளை ஒத்திவக்க அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைத்து
வழக்குகளையும் வரும் 23 ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பி வரிசை வினாத்தாளால்
பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த சிலர் தங்களுக்கு வழக்கு முடியும்வரை ஒரு
பனியிடத்தை ஒதுக்கிவைக்கக்கோரியுள்ளனர். நீதியரசர் . இவ்வழக்குகளைத்
தொடுத்த மனுதாரர்களுக்கு ஒரு பணியிடத்தை ஒதுக்கிவைத்து உத்தரவிட்ட நீதிபதி
வழக்குகளை வரும் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment