ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை விவகாரம் - தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படும். பள்ளி நிர்வாகத் தினர் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்ப மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதல் விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எந்த தகுதித் தேர்விலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்படவில்லை.பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. முதல் 2 தாள்களில் பொதுப் பிரிவினர் தேர்ச்சி பெற தலா 40 சதவீத மதிப்பெண்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 சதவீத மதிப்பெண் போதுமானது.
உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மதிப்பெண் சலுகை வழங்கக் கூடாது என்று உத்தரவிடவில்லை. எனவே, என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமதிப்பெண் தளர்வு வழங்காமல் மறுத்து வருவது சட்டவிரோதம். எனவே, ஆதிதிராவிடர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment