'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனும்உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
'ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால், பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர்.
ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில்நடக்கிறது. 'தாள்- 2 ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரியில் படித்த போது வழங்கப்பட்ட'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்களை, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, பணிநியமனத்திற்கு டிகிரி சான்றிதழும், இறுதி மதிப்பெண் சான்றும் சமர்ப்பிக்கப்படும். இதனால்'செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது, டி.ஆர்.பி.,யின் உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து, சான்றிதழ்களை கேட்டவண்ணம் உள்ளனர். கல்லூரிகள், பல்கலையையும்; பல்கலைகள், அந்தந்த கல்லூரிகளையும்
கைகாட்டுவதால், சான்று பெறமுடியாமல், தேர்ச்சி பெற்றவர்கள் தவிக்கின்றனர். கல்லூரியில்அல்லது தொலைநிலைக் கல்லூரியில் படித்தபோது 'முடிவு நிறுத்தி வைப்பு' (வித்ஹெல்டு)அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பாடத்திற்கான சான்று, பலருக்கு அனுப்பப்படவில்லை.
இதுகுறித்து பல்கலைகள், 'கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என, பதில் கூறுகின்றன. கல்லூரிகளில் கேட்டால், 'பல்கலையில் இருந்து அதுபோன்ற சான்றிதழ்கள் வரவில்லை' என கூறுகின்றனர். 'பல்கலையால் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை' என்ற சான்றும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரிகள் தர மறுக்கின்றன.
இதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் 90 சதவீதத்திற்கும் மேல், 'செமஸ்டர்' வாரியாக சான்றிதழ்கள் சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது. 'புதிய உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனதேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய உத்தரவிற்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்டத் தலைவர் நாகசுப்பிரமணி, செயலாளர் முருகன் கூறியதாவது: டி.ஆர்.பி., யின் இந்த உத்தரவு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். அனைத்து அரசுத் துறைகளில், அடுத்து எந்த பணியிடங்களுக்கு, இதுபோன்று 'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்கள் கோரப்படுமா என, தெரியவில்லை.கடந்த இரு டி.இ.டி., தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு போல,இம்முறையும் நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment