2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் 55 சதவீத நடைமுறை பொருந்த வேண்டும் கி.வீரமணி கோரிக்கை
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித்தேர்வில் அனைவருக்கும் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பதை சற்றே தளர்த்தி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு 55 சதவீத மதிப்பெண், தகுதி மதிப்பெண் என்று அறிவித்துள்ளார். இதனை முதல் நிலையிலே வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியோர்க்கும் இடையிலான தகுதி மதிப்பெண் 20 இருக்கும்போது, இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படியாகப் பின்பற்றப்படும் தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் நின்று எடுத்துக்காட்டாக இருப்பதற்குப் பதிலாக பின் தங்கி இருப்பது எந்த வகையில் நியாயம்?. குறைந்த பட்சம் ஆந்திராவில் பின்பற்றப்படும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்–அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.
ஒரே வகையான தகுதித்தேர்வில் 2012–ல் தேர்வுக்கு ஒரு அளவுகோல், 2013–ல் தேர்வு எழுதியவருக்கு இன்னொரு அளவுகோலா?. 2012–ல் தேர்வு எழுதியவர்கள் நீதிமன்றம் சென்றால், அவர்களுக்கும் 55 சதவீத அளவுகோல் பொருந்தும் என்றுதானே தீர்ப்பு வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment