ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 26-ல் ஸ்டிரைக் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ல் உள்ளிருப்பு போராட்டமும் 26-ல் வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப் போவதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் தமிழக அரசு எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து எங்களது மாநில செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் செவ்வாய்க் கிழமை நடத்தினோம். அதில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்

Comments

Popular posts from this blog