ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 26-ல் ஸ்டிரைக்
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ல் உள்ளிருப்பு போராட்டமும் 26-ல் வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப் போவதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் தமிழக அரசு எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து எங்களது மாநில செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் செவ்வாய்க் கிழமை நடத்தினோம். அதில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment