இன்று காலை, தமிழ்பாடஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன உத்தரவை வழங்குகிறார் -மீண்டும் தினமலர் செய்தி
முதுகலை ஆசிரியர் தேர்வில், நேற்று இரவு, திடீரென, ஏழு பாடங்களுக்கான
தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, இழுபறி நிலையில் இருந்து வந்தது.
இன்று காலை, தமிழ்பாடஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன உத்தரவை வழங்கும் நிலையில், நேற்று இரவு, திடீரென, விலங்கியல், புவியியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி இயக்குனர், ஹோம்சயின்ஸ்,பயோ கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு www.trb.tn.nic.inஎன்ற, இணைய தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விழா நடைபெறுவதால், அவசர, அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், கணிதம், உயிரியல், ஆங்கிலம் உள்ளிட்ட, சில பாடங்களுக்கு,கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதன் முடிவு வெளியிடவில்லை என, கூறப்படுகிறது.
(விலங்கியல், புவியியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி இயக்குனர், ஹோம்சயின்ஸ் என ஐந்து பாடங்களுக்கு மட்டுமே TRB இறுதி பட்டியல் வெளியிட்டுள்ளது ஆனால் ஏழு பாடங்கள் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது)
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment