ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் சலுகை கண்துடைப்பு: கருணாநிதி விமர்சனம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகித மதிப்பெண் சலுகை அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது என்றும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால், வேறு வழியின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகிதம் மதிப்பெண் சலுகை அளிக்க ஜெயலலிதா முன்வந்திருப்பதாகவும், உண்மையிலேயே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மீது பற்றுக்கொண்டு இதனை அறிவிக்கவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகித மதிப்பெண் சலுகை அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது என்றும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால், வேறு வழியின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகிதம் மதிப்பெண் சலுகை அளிக்க ஜெயலலிதா முன்வந்திருப்பதாகவும், உண்மையிலேயே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மீது பற்றுக்கொண்டு இதனை அறிவிக்கவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog