ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து வழக்கு.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக
ப்ரியவதனா உள்ளிட்ட 3 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணான 90 முதல் 104 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் ஒரு படிநிலையிலும், 105 முதல் 119 மதிப்பெண் எடுத்தவர்கள் ஒரு படிநிலையிலும் என புதிதாக 4 படிநிலைகளை உருவாக்கி, இதற்காக 2012-ம் ஆண்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும், 104 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும் ஒரே படிநிலையாகக் கருதுவது தவறு என்றும், எனவே, இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் வரும் 28-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணுடன், 12 ம்வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்ட மதிப்பெண் பட்டியலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
தமிழக அரசின் கண் துடைப்பு – தோற்றது சமூக நீதி !
ReplyDeleteசமூக நீதிக்கு எதிரான - இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தமிழக அரசின் முடிவு. தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரைப் பாதிக்குமாறு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 5% மதிப்பெண் குறைப்பு வெறும் கண் துடைப்பாக ஆக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89 வரையில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 36 மதிப்பெண் வெய்ட்டேஜாக வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எதிரான இந்த அரசாணையை நீக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம் இதன் மூலம் “இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்”. ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89 வரையில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 42 மதிப்பெண் வெய்ட்டேஜாக வழங்க வகை செய்ய வேண்டும் .. உங்கள் ஆதரவுக்கு நன்றி.