பிளஸ்டூ மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்! முறைகேடுகளை தவிர்க்க கல்வித்துறை ஏற்பாடு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது குறித்து புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வுக்கான விடைத்தாள், சம்பந்தப்பட்ட மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவுடன், தேர்வு மையத்திலேயே, மாணவர் பெயர், பள்ளி பெயர், பதிவெண் பகுதியை, அறை கண்காணிப்பாளர் கிழித்து வைத்துக் கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய விடைத்தாளை "பார்கோடிங்' முறையில் மட்டுமே, அடையாளம் காணும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும் முறையிலும் புதுமை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வுத் துறையால் ஒதுக்கப்பட்ட மையங்களில், வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் "ரேண்டம்' முறையில், பதிவெண் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஒரே பள்ளி மாணவர்களுக்கு, அடுத்தடுத்த தேர்வு எண்கள், இனிமேல் கிடைக்காது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக, சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும் மாணவரை பார்த்து, ஒரு மதிப்பெண் பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில் ஏற்பாடு செய்துவிடுகின்றனர். மேலும், "அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண் கேள்விக்கான பதிலை, மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் தான், இந்த புதிய முறையை, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கான பதிவெண்களை அவரே ஒதுக்கீடும் செய்கிறார். இந்த புதிய முறை மூலம் வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும், என்கிறார் கல்வித்துறை அதிகாரி.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment