சென்னை உயர்நீதிமன்றத்தில்PG/TET I / TET II-வழக்குகள் : நீதியரசர் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது.எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி (06.02.14) வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து வழக்குகளும் இதர படங்களில் வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தன. 

TET வழக்குகள் பலவற்றுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்திருந்து. வழக்குகளை நீதியரசர் ஆர் சுப்பையா அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.வழக்கில் மனுதாரர்களின் வாதம் அடுத்தவாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog