(13.03.14)ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்,2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு, வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்குகள் ,இடை நிலை ஆசிரியர் சார்பான வழக்கு, பட்டதாரி நியமனவழக்கு என அனைத்து வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து அரசின் நிலைப்பாட்டை இன்றும் தெரிவிக்கவில்லை.நாளை தெரிவிக்க ஏதுவாக வழக்கினை மீண்டும் நாளைக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை அட்வகெட் ஜெனரல் அல்லது அரசுவழக்கறிஞர் வழக்குகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவித்த பின்னரே வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.

Comments

Popular posts from this blog