(13.03.14)ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்,2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு, வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்குகள் ,இடை நிலை ஆசிரியர் சார்பான வழக்கு, பட்டதாரி நியமனவழக்கு
என அனைத்து வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து அரசின் நிலைப்பாட்டை இன்றும் தெரிவிக்கவில்லை.நாளை தெரிவிக்க ஏதுவாக வழக்கினை மீண்டும் நாளைக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை அட்வகெட் ஜெனரல் அல்லது அரசுவழக்கறிஞர் வழக்குகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவித்த பின்னரே வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment