(13.03.14)ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்,2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு, வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்குகள் ,இடை நிலை ஆசிரியர் சார்பான வழக்கு, பட்டதாரி நியமனவழக்கு
என அனைத்து வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து அரசின் நிலைப்பாட்டை இன்றும் தெரிவிக்கவில்லை.நாளை தெரிவிக்க ஏதுவாக வழக்கினை மீண்டும் நாளைக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை அட்வகெட் ஜெனரல் அல்லது அரசுவழக்கறிஞர் வழக்குகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவித்த பின்னரே வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment