தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளம் கிடைக்கவில்லை தேர்வு எழுதியவர்கள் முடிவு தெரியாமல் அவதி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வை 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருந்தனர். 

இந்த நிலையில் நேற்று குரூப்-4 தேர்வு முடிவு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த முடிவை நேற்று முன்தினம் இரவு ஏராளமானவர்கள் பார்ததனர். முடிவு வெளியிட்டது தெரியாத பலர் முடிவை பார்க்க தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பார்க்க முயற்சி செய்தனர். ஆனால் பல இடங்களில் அந்த இணையதளம் ஆன் ஆகவில்லை. 

இது பற்றி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவரிடம் இரவு 7 மணிக்கு கேட்டதற்கு, நீங்கள் சொல்வது உண்மைதான். இரவு 9 மணிக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 12 லட்சம்பேர்களும் இந்த இணையதளத்தை பார்ப்பதால் பிரச்சினை இருக்கலாம். நாளை வேறு இணையதளத்தில் முடிவை வெளியிட ஏற்பாடு நடக்கும் என்று அதிகாரி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog