ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண் தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி.
முதுகலை ஆசிரியர் நியமன தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவர் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
புதுக்கோட்டை, மணல்மேல்குடி சுவர்ணகுமார் தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி) மூலம் 2012 - 2013 ல் நடந்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்றேன். மொத்தம் 150க்கு 102 'கட் ஆப்' நிர்ண்யிக்கப்பட்டது. எனக்கு 101 மதிப்பெண் கிடைத்தது. விடைத்தாள் நகலை சரிப்பார்த்தேன்.வினா 115க்கு சரியான விடை அளித்துள்ளேன். அதற்க்கு 1 மதிப்பெண் கூடுதலாக வழங்கி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருந்து, என்னை நியமிக்க டி.ஆர்.பி க்கு உத்திரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.அரசு வழக்கறிஞர்நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி மனுதாரரின் அசல் விடைத்தாள் நகலை சமர்ப்பித்தார்.
நீதிபதி:மனுதாரர் 115வது வினாவிற்கு 'சி' என பதில் அளித்துள்ளார்.
கூடுதல் மதிப்பெண்:
ஆனால் 'பி' தான் சரியான விடை; அதை விடையாக எழுதியுள்ளேன்; அதனடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு செய்துள்ளார். கோர்டிற்க்கு தவறான தகவல் அளித்துள்ளார். மனுதள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment