சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவைப்பு. 

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (12.03.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 21வழக்குகளும்விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் சார்பில் அட்வகட் ஜெனரல் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்று ஆஜராக வில்லை. 

வழக்கின் முழுவிவரத்தையும் நீதியரசர் முன் வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். அட்வகட் ஜெனரல் இன்று ஆஜராக இயலாத நிலை உள்ளதால் வழக்கினை வேறு தேதிக்குஒத்திவைக்க அரசு சார்பில் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் வழக்கினை வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments

Popular posts from this blog