ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது, ஆனால் விசாரணைக்கு வருவது கேள்விக்குறியே! 

ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைத்து விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாலும், மேலும் விசாரணை பட்டியலில் கடைசியில் இடம் பெற்றுள்ளதாலும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருவது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை எதிர்த்து தொடரப்பட்டவழக்கு, இடை நிலை ஆசிரியர் சார்பான வழக்கு, பட்டதாரி நியமன வழக்கு என அனைத்து வழக்குகளும் அடுத்தடுத்து விசாரணைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog