குரூப் - 4 கலந்தாய்வுக்கு 6,000 பேருக்கு அழைப்பு
கலந்தாய்வுக்கு 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்படவுள்ளன.
தமிழ்நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட பணியிடங்களில் 3,288 பேரை நியமிக்க கடந்த 1ம் தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி.யில் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதற்கு 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மே 8ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும். தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இதன் விவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) பார்க்கலாம். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள், நீண்ட இழுபறிக்கு பின்னர், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்வை, மொத்தம் 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தனர். குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அது தேர்ச்சி மதிப்பெண்களாக கருதப்படும்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment