ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று (மே 6) முதல் சரிபார்ப்பு 

மதுரை மாவட்டத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓ.சி.பி.எம்., பள்ளியில் இன்று (மே 6) முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.இதற்காக, பள்ளி மையத்தில் பத்து 'போர்டு'கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும், நாள் ஒன்றுக்கு தலா 25 பேருக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். 

பங்கேற்போர் டி.ஆர்.பி.,வலியுறுத்திய அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் ஜெராக்ஸ் பிரதிகளை கொண்டு வரவேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் முன்னிலையில் இப்பணிகள் நடக்கின்றன, என, முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog