ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையா?--- தின மணி
கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை(சி.இ.ஓ.) ஜூன் 7-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு விட்டன.எனினும், ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அணுகி தங்களுடைய விவரத்தை ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment