மே 22ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு!!!
புதிய அரசு அமைய மே 28 தேதி வரை கால அவகாசம் இருந்தது. ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மே 21ம் தேதி புதிய அரசு பதவியேற்க்கவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள்
22ம் தேதி முதல் தளர்த்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல்கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment