தற்காலிக ஆசிரியர்கள் பணி மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு
அரசு பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் , 2008 – 09, 2009 – 10 ஆகிய கல்வி ஆண்டுகளில், தரம் உயர்ந்த உயர், மேல் நிலை பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் 790 பேர் நியமிக்கப்பட்டனர் . இவர்களுக்கு, 2013 டிச., வரை பணியை அரசு நீட்டித்திருந்தது. 2014 ஜன., முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் மூலம், ஏற்கனேவ கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சம்பளம் வழங்க, உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்குரிய பணி நீட்டிப்பு, காலதாமதமாவதால், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான சம்பளத்தை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment