டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment