டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment