தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: பிரவீண்குமார்

 தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "16-வது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக திரும்பப்பெறப் படுகின்றன". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog