தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
2014&2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 4 நாள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது
பேரவை குழுக்கள் மாற்றி அமைப்பு
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதம் பேரவை கூட்டம் நடைபெற இருப்பதாலும், மந்திரிசபை மாற்றப்பட்டதாலும் சட்டப்பேரவை குழுக்கள் நியமன உறுப்பினர்களை மாற்றி அமைத்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வு குழு உறுப்பினராக இருந்த கேபி.முனுசாமி நீக்கப்பட்டு, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். பொது கணக்கு குழு தலைவராக இருந்த எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததையடுத்து, பார்வர்டு பிளாக் எம்எல்ஏ பி.வி.கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அரசு உறுதிமொழி குழு தலைவராக இருந்த ஆர்.பி.உதயகுமார் அமைச்சரானதையொட்டி, அப்பதவி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment