TET மூலமாக 12,000 ஆசிரியர் நியமனம் அறிவித்துவிட்டு - பணி நிரவல் கணக்கிடுவது முரண்பாடானது.
இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்
தமிழகத்தில் செயல்படும், பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல், தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுமோ, என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
ஒவ்வொரு ,ஆண்டும் மே இறுதியில் தொடக்க,நடுநிலை,உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன்மாதம் புதிய பள்ளிகளில் பணியல் சேர்வது வழக்கம்.ஆனால், இக்கல்வியாண்டிற்கான கலந்தாய்வு குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில்,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 2013 செப்., 1ல்,பள்ளிகளின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இறுதிபட்டியல், தயார்செய்யப்பட்டு,சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1:35 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில், உபரி ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.
உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு என்பது,ஒவ்வொரு பள்ளியிலும், பாடவாரியாக கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு, ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்படுவர். 99 சதவீத ஆசிரியர்களுக்கு, இக்கலந்தாய்வின்படி, கட்டாயமாறுதல் வழங்கப்படுகிறது. இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல், உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. மேலும்,ஆசிரியர் தகுதித்தேர்வின் வாயிலாக, 12ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்துவிட்டு, உபரி ஆசிரியர்கள் கணக்கிடுவது முரண்பாடுகளுடன் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கமா நில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், ''இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தபின்,பள்ளிகளில் பல இடங்கள் காலியாகும்.அதன்பின்,ஒவ்வொரு பள்ளியிலும், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதைவிடுத்து, உபரி என்ற பெயரில்,பிற மாவட்டங்களுக்கும்,ஒன்றியங்களுக்கும் ஆசிரியர்களை பந்தாடுவது ஏற்புடையதல்ல. மேலும், 2013ஆக., 1ன்படி உபரி ஆசிரியர்கள் பட்டியல் கணக்கிட்டுள்ளனர்.அதைவிடுத்து, இடமாறுதல்,பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்தியபின், 2014ஆக., 1ன் படி உபரிஆசிரியர் பட்டியல் தயார் செய்தால், ஆசிரியர்களுக்கு சிரமங்களோ, கலந்தாய்வில் முறைகேடுகளோ இருக்காது,''என்றார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment