இன்று குரூப் 2 ஏ தேர்வு
உதவி ஆணையாளர் உள்பட 2269 பணியிடங்களுக்கான குரூப் 2 ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
அரசின் பல்வேறுத் துறைகளில் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட 2269 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இத்தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வினியோகிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக 32 மாவட்டங்களில் 240-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இத்தேர்வை கண்காணிக்கவும் மைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment