இன்று குரூப் 2 ஏ தேர்வு உதவி ஆணையாளர் உள்பட 2269 பணியிடங்களுக்கான குரூப் 2 ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அரசின் பல்வேறுத் துறைகளில் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட 2269 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இத்தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வினியோகிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக 32 மாவட்டங்களில் 240-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இத்தேர்வை கண்காணிக்கவும் மைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog