600 மாணவர்களுக்கு ஒரே ஒரு தமிழாசிரியர்! அரசு மேல்நிலைப்பள்ளியில் அவலம்
அன்னுார் : அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 600 மாணவர்களுக்கு ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளதால் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது.
அன்னுார் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி 65 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு 1,750 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு 6,7 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கில வழியிலும் கற்பிக்கப்படுகிறது. இங்கு பிளஸ் 1ல் கணிதம் மற்றும் உயிரியல் அடங்கிய முதல் பிரிவு, கணிதம், கணினி அறிவியல் அடங்கிய இரண்டாம் பிரிவு, கலைப்பிரிவு, முழு அறிவியல், வரலாறு, புள்ளியியல் என ஆறு பிரிவுகள் செயல்படுகின்றன. பிளஸ் 2வில், புள்ளியியல் தவிர்த்து ஐந்து பிரிவுகள் செயல்படுகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 600 மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் உள்ள 11 வகுப்புகளிலும் தமிழ் பாடம் உள்ளது. எனவே, ஒரே தமிழாசிரியர் 11 வகுப்புகளுக்கு தலா ஒரு முறை செல்ல மூன்று நாட்கள் ஆகிவிடும். இதனால், தமிழ் பாடத்தில் கற்பித்தலும், கற்றலும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன். வரலாறு மற்றும் பொருளாதாரம் பாடங்களுக்கு பிளஸ்1, பிளஸ் 2வில், கடந்த ஆண்டிலிருந்தே ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பிளஸ் 2 தேர்வில் கலை மற்றும் வரலாறு பிரிவு மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற முடியாமல் போனது.
பெற்றோர்கள் கூறுகையில், 'பிளஸ்2 தேர்வுதான் மிக முக்கியம். இதில் இரண்டு பாடங்களுக்கு ஆசிரியரே இல்லை என்பதாலும், தமிழுக்கு 11 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருவர் மட்டுமே உள்ளதாலும், மாணவர்களின் தேர்ச்சியும், அதிக மதிப்பெண் பெறுவதும் பாதிக்கப்படுகிறது. காலி பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment