ஆங்கில மீடிய வகுப்பிற்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்! 

மதுரையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடந்தது.சட்டசெயலாளர் வெங்கடேசன், தலைமையாசிரியர்கள் கிறிஸ்டோபர் ஜெயசீலன், நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். 

பள்ளிகளில் போதியநிதி இல்லாததால்,பொதுப்பணித்துறை சார்பில் மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுபள்ளிகளில் ஆங்கிலமீடிய வகுப்பிற்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். 

உபரிஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்யக்கூடாது. புதிய கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொதுபணிமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடத்தவேண்டும்.காலியாக உள்ள சி.இ.ஓ.,நேர்முக உதவியாளர் பணியிடங்களில் மூத்த தலைமையாசிரியர்களை நியமிக்கவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Comments

Popular posts from this blog