ஆங்கில வழிக் கல்விக்கு ஆசிரியர் இன்றி அவதி.
மேலுார் அரசு பெண்கள் பள்ளியில், ஆங்கில வழிக் கல்விக்கு, போதிய ஆசிரியர்கள் இன்றி, மாணவியர் அவதியுறுகின்றனர்.
இப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் இரண்டாயிரத்து ஐநுாறு மாணவிகள், 6 முதல் 12 வரை ஆங்கில வழிக் கல்வியில் 600 மாணவிகள் படிக்கின்றனர். மாணவியரின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.
குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி பிரிவில் போதிய ஆசிரியர்கள் இல்லை. தமிழ்வழிக் கல்வி ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம்பேசி போதிய ஆசிரியர்களை நியமிக்கும்படி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர்.
மாணவியர் கூறியதாவது: மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும் என நம்பி இப்பள்ளியில் சேர்ந்தோம். இங்கு போதிய ஆசிரியர்கள் இல்லை, என்றனர்.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''தற்போது மாணவியர் சேர்க்கை நடப்பதால், பிறகு மாணவியர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment