டி.என்.பி.எஸ்.சி., முடக்கம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.இத்தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்டது. இதன் தலைவராக இருந்த நவநீதகிருஷ்ணன் ராஜ்சபா இடைத்தேர்லுக்கான அ.தி.மு.க., உறுப்பினராக போட்டியிடுவதால் அப்பதவியை ராஜினாமா செய்தார். தலைவர் பதவி காலியாகி 9 நாட்கள் ஆகிறது. புதிய தலைவர் நியமிக்கப்படாததால் தேர்வு முடிவு அறிவிப்பு, புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதே போல தேர்வாணையத்தில் 7 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. தேர்வாணை முடக்கம் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் முடக்கியுள்ளது.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment