வி.ஏ.ஓ., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு :384 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
சென்னை : வரும் 14ம் தேதி, நடக்க உள்ள, வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., வருவாய்த் துறையில், காலியாக உள்ள, 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, வரும் 14ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது.இதற்கு, 10 லட்சம் லட்சத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பித்ததில், தகுதியில்லாத, 384 பேரின் விண்ணப்பங்களை, தேர்வாணையம் நிராகரித்தது. தேர்வு தேதி நெருங்கியதை அடுத்து, தகுதியான தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்கள், www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில், விண்ணப்ப பதிவு எண்ணை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். 'ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தங்களின் பெயர், நிராகரிக்கப்பட்டவர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை, சரிபார்க்க வேண்டும். இந்த பட்டியலிலும், பெயர் இல்லை எனில், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட விவரங்களுடன், வரும் 9ம் தேதிக்குள், contacttnpsc@ gmail.com என்ற, 'இ-மெயில்' முகவரிக்கு, விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment