TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம்:
ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கு வேண்டியும்,ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சதவீதத்தை 60% திலிருந்து 85% உயர்த்த கோரியும் தற்போது சென்னை சேர்பாக்கம் வாலாஜா சாலையில் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போது(11 AM) வரை சுமார் 300 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.விரிவான தகவல் விரைவில்...
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment