வெளியிடப்பட்டது!:குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'
வெளியிடப்பட்டது!:குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'
20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாகஉள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1 முதல்நிலை தேர்வை,டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.இதற்கு, 6.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம்முழுவதும், 29 மையங்களில், தேர்வு நடக்கிறது.இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்', , தேர்வாணைய இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வர்கள், பதிவு எண்ணை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment