குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தேர்வில் வெற்றி பெற கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தன்னார்வ பயிலும் மையத்தின் மூலம் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்த ஹால் டிக்கெட் நகல், புகைப்படத்துடன் ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து, ஜூலை 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog