குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தேர்வில் வெற்றி பெற கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தன்னார்வ பயிலும் மையத்தின் மூலம் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்த ஹால் டிக்கெட் நகல், புகைப்படத்துடன் ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து, ஜூலை 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment