வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்: ஆசிரியர் நியமனத்தில் காலியிடம் அதிகம் எதிரொலி
அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வெயிட் டேஜ் மார்க் அடிப்படையில் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு, பிளஸ்-2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் ஆகியவை குறிப்பிட்ட அளவு சேர்க்கப்பட்டு கட் ஆப் மார்க் 100-க்கு கணக்கிடப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் வரலாறு பாடத் தில்தான் காலியிடங்கள் அதிகம் (3,592). எனவே, வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும். அதே போல், ஆங்கில பாடத்தில் 2822 காலியிடங்கள் இருப்பதால் அதற்கும் கட் ஆப் சற்று குறையும்.
அதேநேரத் தில், தாவரவியல், விலங்கியல் பாடங் களில் காலியிடங்கள் வெறும் 260 (தலா) மட்டுமே உள்ளதால் அவற்றுக்கு கட் ஆப் மார்க் மிகவும் அதிகமாக இருக்கும். ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒவ்வொரு பாடத் திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரிய வில்லை. தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போட்டி அமைந்திருக்கும். பட்டதாரி ஆசிரியர் தேர்வுபட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment