குரூப் 2 தேர்வு 'கீ ஆன்சர்' வெளியீடு.

சென்னை: கடந்த மாதம், 29ம் தேதி நடந்த, குரூப் 2 தேர்வுக் கான விடைகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் நிலையில், 2,846 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடந்தது. 4.23 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.இதன் விடைகள், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு, விடைகள் தொடர்பாக ஆட்சேபணை இருந்தால், வரும், 10ம் தேதிக்குள், தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Comments

Popular posts from this blog