ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். - மீனாட்சி சுந்தரம்

கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புதுஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

 தொடக்கத்தில் 55ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதைத் தொடர்ந்து வந்த 5 அமைச்சர்கள்,ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி விவரங்களை அறிவித்தனர். 

இப்போது 6வதாக வந்துள்ள அமைச்சர் வீரமணி, கடந்த 3ஆண்டில் 51000 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். ஆனால் பேரவையில் அறிவித்தது வேறு. எனவே ஆசிரியர் நியமனங்கள், நிலைவாரியாக, நிர்வாகவாரியாக மாவட்டவாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்

Comments

Popular posts from this blog