7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர்.

தமிழக அரசு செய்திக் குறிப்பு. மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன. 

தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

 இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog