பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, தஞ்சையில், பி.எட்.,கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பனகல் கட்டிடம் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், நவீன் உட்பட பலர் பங்கேற்றனர். 

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களில் பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகளை பணியமர்த்தவேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில், 6 முதல், 10வது வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

Comments

Popular posts from this blog