பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்.
ஆசிரியர்தகுதித் தேர்வில் வெயிட்டேஜ்மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் செவ்வாய் கிழமை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப் பட்டவர்கள் குழுக்களாக வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும்,அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அமைதியான முறையில்,கோரிக்கைகளை மனுவக அளிக்க முயன்ற தங்களை காவல் துறையினர் கைது செய்ததாகவும் ஆசிரியர்கள் கூறினர்.
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று வள்ளுவர் கோட்டத்தின் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்த அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment