பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்.
ஆசிரியர்தகுதித் தேர்வில் வெயிட்டேஜ்மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் செவ்வாய் கிழமை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப் பட்டவர்கள் குழுக்களாக வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும்,அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அமைதியான முறையில்,கோரிக்கைகளை மனுவக அளிக்க முயன்ற தங்களை காவல் துறையினர் கைது செய்ததாகவும் ஆசிரியர்கள் கூறினர்.
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று வள்ளுவர் கோட்டத்தின் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்த அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment