பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம். ஆசிரியர்தகுதித் தேர்வில் வெயிட்டேஜ்மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் செவ்வாய் கிழமை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்டவர்கள் குழுக்களாக வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும்,அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில்,கோரிக்கைகளை மனுவக அளிக்க முயன்ற தங்களை காவல் துறையினர் கைது செய்ததாகவும் ஆசிரியர்கள் கூறினர். பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று வள்ளுவர் கோட்டத்தின் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்த அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

Comments

Popular posts from this blog