கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியுமா? 

சட்டசபையில் கேள்விநேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு), கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். 

 இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது: அத்தகைய பிரிவு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது குறித்து முதல் அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இனிவரும் காலங்களில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்தும் முதல் அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog