இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான தகுதிகாண் மதிப்பெண் வெளியீடு-Dinamani
ஆசிரியர் தகுதித் தேர்வின், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 592 பேரின் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) விவரங்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேரும், இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேரும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண்(வெயிட்டேஜ் மதிப்பெண்) கணக்கிடப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 11 முதல் 14 வரை இந்த மையங்கள் செயல்படும். இங்கு தகுதிகாண் மதிப்பெண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் தேர்வர்கள் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் தகுதிகாண் மதிப்பெண் விவரங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இயற்பியல், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முக்கிய விடைகள் மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு திருத்தப்பட்ட பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் போக, இந்தப் பட்டியலில் புதிதாக யாராவது இடம்பெற்றிருந்தால் அவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளத
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment