TNTET : போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள்  

2013-ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் மேல் பெற்ற ஆசிரியர்கள் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எங்களின் பணிவான வேண்டுகோள். 

 *ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வினைப் போல் தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும். காரணம்: Weightage என்பது +2 மதிப்பெண்ணை= 10 B,SC/B.Aமதிப்பெண்ணை=15 B,EDமதிப்பெண்ணை=15 தகுதிதேர்வுமதிப்பெண்ணை=60 மொத்தம்=100என கணக்கிடுவது. 

1.தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் TNPSC,TRB & CTET,UPSC போன்ற தேர்வுகளுக்கு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. 

2.+2, B.SC / B.A , B.ED ஆகிய படிப்பானது பத்து வருடத்திற்கு முன்பு எடுத்த மதிப்பெண் மிககுறைவு[மதிப்பிடுமுறை]ஆனால் தற்போழுது எடுக்கும் மதிப்பெண் மிக ஆதிகம்,ஓவ்வொருவரும் வெவ்வேறு கால கட்டத்தில் படித்துள்ளனர். 

3.+2 VOCATIONAL பிரிவில் செய்முறைதேர்வில் 440 மதிப்பெண் பெறும் அவர்கள் சராசரியாக தேர்ச்சி பெற்றாலே 900 மதிப்பெண் பெறுகின்றனர்.அவர்களுக்கு இணையாக மற்ற +2 பாட பிரிவு பயின்றவர்களை கருத கூடாது. 

4. 10-15 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் தருவாயில்,ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி [90மதிப்பெண்] பெற்றால் தான் வேலை என்ற அரசின் அறிவிப்பால் அத்தேர்வினையும் எழுதி 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றும் வேலை கிடைக்கும் என எதிர்பாப்த்து Weightage காரணமாக வேலை கிடைக்காமல் வாடுகிறோம். 

[அல்லது] 

*தேர்வு நடத்துவதற்கு முன்உள்ள விதிமுறைகளே அந்த தேர்வின் முடிவிற்கு பொருந்தும் எனவே 2013ல் நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் 90 மதிப்பெண்மேல்(60%) பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்

Comments

Popular posts from this blog